காரைக்கால்:நெடுங்காடு மனோன்மணி மாரியம்மன் கோவிலில் தீமிதி விழாவை முன்னிட்டு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.காரைக்கால் நெடுங்காடு மனோன்மணி மாரியம்மன் மற்றும் அஷ்டபுஜ மகா காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 20ம் தேதி வெகு விமர்சையாக நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (மே., 21ல்) மகிஷ சம்ஹார திருவிழாவை முன்னிட்டு புஷ்பப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.