நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.
நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி மற்றும் அக்னி நட்சத்திர நிவர்த்தி மழை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. கணபதி, லட்சுமி ஹோமங்கள் நடந்தது. மழை வேண்டி வருண பகவான் மூலமந்திரம் சொல்லி பிரார்த்தனை செய்தனர்.108 கலசங்களில் புனித நீர் நிரப்பி யாகம், விநாயகருக்கு கலசாபிஷேகம் நடந்தது. வெள்ளிகாப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பூஜைகளை முருகானந்தம், முருகன், ஹரிபிரபோ குருக்கள் செய்தனர். பரம்பரை தர்மகர்த்தா சுந்தரமூர்த்தி உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் 108 முறை கோவிலை வலம் வந்து, வேண்டுதலை நிறைவேற்றினர்.தொடர்ந்து அருள்தரும் அய்யப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.