பதிவு செய்த நாள்
23
மே
2019
12:05
பரங்கிப்பேட்டை:கொத்தட்டை கூத்தாண்டவர் கோவிலில் நடந்த திருவிழாவில், ஏராளமான திருநங்கைகள், பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் திருவிழா நேற்று முன்தினம் (மே., 21ல்) இரவு நடந்தது.
அதையொட்டி, கடந்த 8ம் தேதி கொடியேற்றப்பட்டது. 17ம் தேதி அர்ச்சுணன் திரவுபதி திருகல்யாணம், சுவாமி வீதியுலா காட்சி, 19ம் தேதி விராட பர்வம் என்னும் மாடு பிடி சண்டை, 20ம் தேதி சுவாமி வீதியுலா நடந்தது.முக்கிய விழாவான, நேற்று முன்தினம் (மே., 21ல்) இரவு கோவில் முன்பு அரவாணிகள் தாலிக்கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.அரவாணிகளுக்கு, கோவில் பூசாரி ராமதாஸ் தாலிக்கட்டினார். தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் வந்த அரவாணி கள் கோவில் அருகே குத்தாட்டம் போட்டனர்.
இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. கொத்தட்டையை சுற்றியுள்ள கிராமங் களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை, விழாக்குழு தலைவர் தில்லைகோவிந்தன், முன்னாள் ஊராட்சி தலைவர் நாகராஜ், சிவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.