பதிவு செய்த நாள்
23
மே
2019
02:05
போத்தனூர்: சுந்தராபுரம் அருகே செங்கோட்டையா காலனியிலுள்ள நாககாளியம்மன் கோவிலின், 22ம் ஆண்டு திருவிழா, 20ல் வீரபத்திரர் பொங்கல், படையல் பூஜையுடன்
துவங்கியது. நேற்று முன்தினம் (மே., 21ல்) கணபதி ஹோமம், மூலவர், பரிவார தெய்வங் களுக்கு காப்பு கட்டுதல், பலி பீட அபிஷேகம், அம்மன் திருக்கொடி கட்டுதல், திருக் கல்யாணம் உள்ளிட்டவை நடந்தன. நேற்று (மே., 22ல்) காலை குறிச்சி பொங்காளியம்மன் கோவிலிலிருந்து சக்தி கரக ஊர்வலம் துவங்கியது.
பொள்ளாச்சி, சாரதா மில் ரோடு வழியாக கோவிலை சென்றடைந்தது. மதியம் மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தன. மாலையில் மாவிளக்கு வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.
திரளானோர் அம்மனை வழிபட்டு சென்றனர். இன்று (மே., 23ல்) காலை மஞ்சள் நீராட்டு நடக்கிறது. நாளை மாலை மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.