கம்மாபுரம்:சங்கடஹர சதுர்த்தியொட்டி, கம்மாபுரம் அடுத்த ஊ.மங்கலம் விநாயகர் கோவிலில், நேற்று (மே., 22ல்) சிறப்பு வழிபாடு நடந்தது.இதனையொட்டி, காலை 9:00 மணிக்கு விநாயகர் சுவாமிக்கு, 108 அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சந்தனகாப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதேபோல், கம்மாபுரம் மருத்துவ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.