பதிவு செய்த நாள்
24
மே
2019
01:05
பொம்மிடி: பொம்மிடி பொன் முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. தர்மபுரி மாவட்டம், பொம்மிடியில், பொன் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 40ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த, 12ல், முனியப்பன் சுவாமிக்கு எல்லை பூஜையுடன் துவங்கியது. 13ல், பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 17 மாலை, 5:00 மணிக்கு, விளக்கு பூஜையும், 21 காலை, 6:00 மணிக்கு, முனியப்பன் கோவிலில் இருந்து, குதிரை மீது, சக்தி அழைத்தலும், தொடர்ந்து, கூழ் அழைப்பு நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று (மே., 23ல்) காலை, 7:00 மணிக்கு, முளைப்பாரி அழைப்பு மற்றும் பொங்கலிடுதல், மதியம், 3:00 மணிக்கு, மாவிளக்கு, அலகு குத்துதல், பின், வாணவேடிக்கையுடன் அம்மன் தேரோட்டம் விமர்சையாக நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.