திண்டிவனம் பச்சைவாழியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2019 01:05
திண்டிவனம்:திண்டிவனம் பாங்கொளத்தூர் பச்சைவாழியம்மன் கோவில் தீ மிதி விழா வரும் 28ம் தேதி நடக்கிறது.
திண்டிவனம், பாங்கொளத்தூர் கிராமத்தில் உள்ள மன்னாத சுவாமி சமேத பச்சைவாழியம்மன் கோவில் பிரமோற்சவ விழா வரும் 26ம் தேதி துவங்குகிறது. விழாவையொட்டி, அன்று காலை 7:30 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.27ம் தேதி மதியம் 12:00 மணிக்கு வாழ்முனீஸ்வரருக்கு பாத பூஜை. சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 8:00 மணிக்கு ராதாருக்மணி பாண்டுரங்க குழுவினரின் கோலாட்ட பஜனையும் நடக்கிறது. இரவு 11:00 மணிக்கு பச்சைவாழியம்மன், வாழ்முனீஸ்வரர் வரலாறு வில்லுபாட்டு மூலம் விளக்கப்பட உள்ளது.தொடர்ந்து 28ம் தேதி காலை 7:00 மணிக்கு தீ மிதி உற்சவமும்; 8:00 மணிக்கு வசந்த உற்சவமும் நடக்கிறது.