வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜையையொட்டி விநாயகருக்கு, சிறப்பு அபிஷேக பூஜையும் நடந்தது. தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.பூஜையில் சுமங்கலி பாக்கியத்துக்கு பெண்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று முன் தினம் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.