சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே எஸ்.கோவில்பட்டியில் நடந்த விழாவில் பக்தர்கள் 240 புரவிகளை எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
சூரக்குடி கிராமம் எஸ்.கோவில்பட்டியில் உள்ள சிறைமீட்ட அய்யனார், செகுட்டையானார் கோயிலில் வைகாசி திருவிழா மே 17 அன்று காப்பு கட்டுடன் துவங்கியது. விழாவிற்கு மண்குதிரைகள் செய்ய கிராமத்தார்கள் சார்பில் மே 10 ம் தேதி பிடிமண் கொடுக்கப்பட்டது. அந்த மண்ணில் 2 அரண்மனை புரவிகளும், நேர்த்திக்கடனாக 240 புரவிகளை செய்தனர். சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயிலில் இருந்து சந்தன காப்பு, நகர் காளை நேற்று காலை 11:00 மணிக்கு புரவி பொட்டலுக்கு வந்தது. மே 23 அன்று இரவு 7:00 மணிக்கு சூரக்குடி கச்சேரி திடலுக்கு கொண்டுவந்து சிறப்பு அலங்காரம், பூஜை செய்தனர். நேற்று மே 24ம் தேதி அங்கு சாமியாட்டம் முடிந்ததும் புரவிகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. புரவிகள் கோயில்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. செகுட்டு அய்யனார் தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளினார்.