பதிவு செய்த நாள்
25
மே
2019
12:05
மீஞ்சூர்: வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின் தேர் திருவிழாவில், பக்தர்கள் தேரின் வடம்பிடித்து இழுத்தனர்.வடகாஞ்சி எனப்படும், மீஞ்சூர், பெருந்தேவி தாயார்
சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், 17ம் தேதி முதல், பங்குனி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
கொடியேற்றம், கருடசேவை என, தொடர்ந்து உற்சவங்கள் நடைபெற்றன.விழாவின், 7ம் நாள் உற்சவமாக, தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பூக்கள் மற்றும் வண்ண
ஆடைகளால் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவ பெருமான் வீற்றிருந்தார்.காலை, 9:00 மணிக்கு, நிலையில் இருந்து புறப்பட்ட தேர், மாடவீதிகள்
வழியாக உலா வந்தது. தேர் திருவிழாவில், மீஞ்சூர், பொன்னேரி, நந்தியம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று, கோஷ மிட்டபடி, தேரின் வடம்பிடித்து இழுத்து பெருமாளை வழிபட்டனர்.மீஞ்சூர், காவல் துறை, பொன்னேரி தீயணைப்பு துறையினர், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். திருவிழாவின்
போது, பக்தர்களுக்கு மோர், குளிர்பானம், அன்னதானங்கள் வழங்கப்பட்டன.