பதிவு செய்த நாள்
25
மே
2019
01:05
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள், 30 நாட்களில், 67.16 லட்சம் ரூபாய் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
அப்போது பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக மலைக்கோவிலில் உள்ள உண்டியலில் செலுத்துகின்றனர்.அந்த வகையில், 30 நாட்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையை நேற்று (மே., 24ல்) கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) ஞானசேகரன் ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் உண்டியல்களை திறந்து, பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பிரித்து எண்ணப்பட்டது.இதில், 67 லட்சத்து, 16 ஆயிரத்தி, 200 ரூபாய் ரொக்கம், 618 கிராம் தங்கம், 12 கிலோ வெள்ளி போன்றவை பக்தர்கள் உண்டியலில் செலுத்தியிருந்தனர்.