பதிவு செய்த நாள்
25
மே
2019
01:05
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், 95 லட்சம் ரூபாயை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர்
கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோரும், பவுர்ணமியன்று லட்சக்கணக்கானோரும், கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்வர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியல் காணிக்கை செலுத்துவது வழக்கம்.
அந்த உண்டியல் காணிக்கை, மாதந்தோறும் பவுர்ணமி முடிந்த ஓரிரு நாட்களில் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, வைகாசி மாத பவுர்ணமி முடிந்து உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள் காணிக்கையாக, 95 லட்சத்து, 90 ஆயிரத்து, 183 ரூபாய், 180 கிராம் தங்கம், 663 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.