வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார்.
2வது முறை பிரதமராக மோடி பதவியேற்கும் முன்னர், தன்னை வெற்றி பெற செய்த வாரணாசி தொகுதி மக்களுக்கு இன்று (27 ம் தேதி ) நன்றி தெரிவிக்க உள்ளார். இதனை முன்னிட்டு அங்கு சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் வாராணாசி வந்தார். அவரை கவர்னர் ராம்நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் பா.ஜ., தலைவர் அமித்ஷா வரவேற்றனர்.
லோக்சபா தேர்தல் முடிந்த மறுநாள் மோடி கேதார்நாத் சென்று தியானத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் தனது வெற்றியை முதன்முதலாக தாயிடம் தெரிவித்து நேற்று ஆசி பெற்றார். இன்று பிரதமர் மோடி முதல் நிகழ்ச்சியாக காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தார். தொடர்ந்து மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் மெகா டிஜிட்டல் ஸ்கிரீன் வைக்கப்பட்டுள்ளது. வாராணாசியில் பல்வேறு இசைகலைஞர்கள் குவிந்துள்ளனர். மேள தாளங்களுடன் 100 க்கணக்கான கலைஞர்கள் வந்துள்ளனர். ராமர், அனுமான் என பல்வேறு தெய்வகளின் மாறு வேடங்களில் கலைஞர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.