பதிவு செய்த நாள்
27
மே
2019
01:05
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னமண்டலி கிராமத்தில், ஆரூர் என்கிற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஜாத்திரை வெகு விமர்ச்சை யாக, 7 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டிற்கான ஜாத்திரை, கடந்த, 20ம் தேதி துவங்கியது. தினமும் மாலையில், கிராம வீதிகளில், பூங்கரகம் உலா வந்தது.நிறைவு நாளான நேற்று (மே., 26ல்) காலையில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். இரவு, 7:00 மணிக்கு பூங்கரகத்துடன் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.