பதிவு செய்த நாள்
27
மே
2019
02:05
அதியமான்கோட்டை: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தட்சணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டையில், தட்சணகாசி
காலபைரவர் கோவில் உள்ளது. தேய்பிறை அஷ்டமியான நேற்று (மே., 26ல்), தட்சண கால பைரவருக்கு காலை, 6:00 மணிக்கு, அஷ்ட பைரவ யாகம், அஷ்ட லட்சுமி யாகம் உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனைகள், 28 ஆகம பூஜைகள் நடந்தன.
மதியம், 12:00 மணிக்கு மூலவர் வெள்ளி அலங்காரத்தில் கோவில் பிரகாரத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 12:00 மணிக்கு 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாகபூஜை நடந்தது. தேய்பிறை அஷ்டமியான நேற்று (மே., 26ல்), தமிழகம், கர்நாடகாவின் பல்வேறு
பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், தட்சணகாசி காலபைரவருக்கு சாம்பல் பூசணி, தேங்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.