பதிவு செய்த நாள்
27
மே
2019
02:05
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், சீதா கல்யாண மகோத்சவ விழா கடந்த, 24ல் படப்பிரதி ஷ்டையுடன் துவங்கியது. 25 காலை விக்னேஸ்வர பூஜை மற்றும் பூர்வாங்க பூஜைகள் தோடய மங்களம், குருகீர்த்தனை, அஷ்டபதி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மூன்றாவது நாளான நேற்று (மே., 26ல்) காலை, 7:30 மணிக்கு, உஞ்ச விருத்தியும், 8:30 மணிக்கு, தோடயமங்களம், குருகீர்த் தனை கல்யாண அஷ்டபதி ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தன. காலை, 11:30 மணிக்கு, சீதா கல்யாண வைபவ மகோத்சவம் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலை, 4:30 மணிக்கு, பவளிம்பு வசந்த கேளிக்கை, ஆஞ்சநேய உற்சவம் ஆகியவை நடந்தன. நிகழ்ச்சிகள் அனைத்தும் தேப்பெருமாநல்லூர் நரசிம்ம பாகவதர் மற்றும் குழுவினரால் நடத்தப்பட்டது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.