பதிவு செய்த நாள்
14
மார்
2012
10:03
திருத்தணி :முருகன் கோவிலில் கடந்த மாதம் உண்டியலில் 55 லட்சம் ரூபாய், அரை கிலோ தங்கம், மூன்றரை கிலோ வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற பணம், தங்க நகைகள், வெள்ளி, செப்பு, பித்தளை ஆகிய பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். கடந்த மாதம் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் தனபால் முன்னிலையில், உண்டியல் திறந்து ஊழியர்களால் எண்ணப்பட்டது. இதில் 55 லட்சத்து, 31 ஆயிரத்து, 501 ரூபாய், 515 கிராம் தங்கம், வெள்ளி 3,500 கிராம், 13 கிலோ செப்பு தகடு, பித்தளை செப்பு என, ஆறரை கிலோவும் இருந்தது.