Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மண்டைக்காடு பகவதி கோயிலில் ... திருமலையில் அபிஷேக நேரத்தில் இலவச தரிசனம்: ரத்து செய்ய முடிவு! திருமலையில் அபிஷேக நேரத்தில் இலவச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோபுரம் இடிந்ததை ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு மறுப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 மார்
2012
10:03

திருச்சூர் : கேரளா, திருச்சூர் வடக்குநாதர் கோவிலின் தெற்கு கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்தது. இதை ஆய்வு செய்யவந்த தொல்லியல் துறை அதிகாரிகளை கோவில் பாதுகாப்பு சமிதியினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விட்டனர். கேரளா, திருச்சூர் நகரில் பிரசித்தி பெற்ற பூரம் உற்சவம் நடைபெறும் பகுதியில் வடக்குநாதர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த கோவிலில், கடந்த 14 ஆண்டுகளாக தொல்லியல் துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், ஓராண்டுக்கும் மேலாக, கோவிலில் பணிகள் பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பணிகள் நத்தை வேகத்தில் நடப்பதாலும், மேலும் பல்வேறு காரணங்களால் கோவில் பாதுகாப்பு சமிதியினருக்கும், தொல்லியல் துறையினருக்கும் பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இரண்டாண்டுகளாக, கோபுரத்தின் பல பகுதிகளும், இரும்புத்தூண்களும் தான் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந் நிலையில், தெற்கு கோபுரத்தின் ஒரு பகுதி (மேற்கு பகுதி) நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, அப்பகுதியில் பக்தர்கள் யாரும் இல்லாததால், காயமேற்படவில்லை. இதையறிந்த தொல்லியல் துறை கண்காணிப்பாளர் டாக்டர் நம்பிராஜன் மற்றும் அதிகாரிகள் கோவிலுக்கு வந்தனர். அவர்களை கோவில் பாதுகாப்பு சமிதியினர் தடுத்து நிறுத்தி, "எப்போது கோவில் பராமரிப்புப் பணிகள் முடிவடையும் என்பதற்கு உத்தரவாதம் தந்தால் தான் கோவிலுக்குள் செல்ல அனுமதிப்போம் என்றனர். இதை அடுத்து இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, தொல்லியல் துறையினர் திரும்பிச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar