Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோபுரம் இடிந்ததை ஆய்வு செய்ய ... பூதகருப்பசாமி கோயில் மீன் பிடிதிருவிழா! பூதகருப்பசாமி கோயில் மீன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் அபிஷேக நேரத்தில் இலவச தரிசனம்: ரத்து செய்ய முடிவு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 மார்
2012
10:03

நகரி : அபிஷேக நேரத்தில் இலவச வரிசை மூலம் செல்லும் பக்தர்களை அனுமதிப்பது, நாளை (16ம் தேதி) முதல் ரத்து செய்ய, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில், ஒவ்வொரு வெள்ளியன்றும் அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு அபிஷேக சேவை நடத்தப்படுகிறது. முன்பதிவு மூலம் இந்த சேவையில் பக்தர்கள் கலந்து கொண்டு, மூலவரின் எதிரில் அமர்ந்தபடி சாமியை கண் குளிர தரிசனம் செய்கின்றனர். இந்த அபிஷேக சேவையை இலவச வரிசை மூலம் செல்லும் பக்தர்களும் கண்டுகளிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டுமென்று ஏராளமான பக்தர்கள் விடுத்த கோரிக்கையின் பேரில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், தேவஸ்தான நிர்வாகக் குழுவின் உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி, அபிஷேக நேரத்திலும், இலவச வரிசை நிறுத்தாமல் கோவில் சன்னிதியில் ஜெய, விஜயர் சிலைகள் அமைந்துள்ள வாசற்படி அருகில் இருந்து, சாமிக்கு நடத்தப்படும் அபிஷேக சேவைகளை பார்த்தபடியே செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. மூலவருக்கு அபிஷேகம் நடத்தப்படும் போது, கோவில் அர்ச்சகர்கள், அபிஷேக சேவைகளை நடத்த மூலவருக்கு முன் குறுக்கும், நெடுக்குமாக செல்வதால், இலவச வரிசையில் வரும் பக்தர்கள் அபிஷேக சேவையையும், சாமியையும் காண முடியவில்லை என, தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த, ஒரு சிறப்புக் குழுவை அதிகாரிகள் நியமனம் செய்தனர். இக்குழுவினர், அபிஷேக நேரத்தில் பக்தர்களுக்கு ஏற்படும் அசவுகரியத்தை ஆய்வு செய்தனர். அபிஷேக நேரத்தில் இலவச வரிசையில் வரும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவதால், அவர்களுக்கான தரிசன சேவையை ரத்து செய்ய வேண்டுமென அளித்த பரிந்துரையின் பேரில், நாளை முதல், அபிஷேக நேரத்தில் இலவச தரிசன அனுமதியை ரத்து செய்ய, தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இக்கோயிலில் ஆஞ்சநேயரது ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி, மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று ... மேலும்
 
temple news
பெரம்பலுார்; பெரம்பலுார் அருகே தேர் திருவிழாவின் போது, அச்சு முறிந்ததால், சுவாமியுடன் தேர் சாய்ந்து ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar