பதிவு செய்த நாள்
28
மே
2019
02:05
திருப்போரூர்: தண்டலம் துலுக்காணத்தம்மன் கோவிலில், 17ம் ஆண்டு தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் 26ல், இரவு நடந்தது.திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில், பழமையான துலுக்காணத்தம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், இக்கோவிலில் நடைபெறும் தீ மிதி திருவிழா, 17ம் ஆண்டாக, நேற்று முன்தினம் 26ல், நடந்தது.இரவு, 8:00 மணிக்கு, காப்பு கட்டிய பக்தர்கள், தீ மிதித்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.பின், சிறப்பு அலங்காரத்தில், அம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.