மேலூர் :மேலூர் அருகே சருகுவலையபட்டியில் கிராமத்தினர் பங்கேற்ற மீன்பிடித் திருவிழா நேற்று நடந்தது. இங்கு பூதகருப்பசாமி கோயில் அருகில் கம்பிளிக் கண்மாய் உள்ளது. இந்தக்கண்மாயில் மீன் பிடித் திருவிழா குறித்து தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை மக்கள் அங்கு கூடினர். கோயிலில் சாமி கும்பிட்டு ஊர் பிரமுகர்கள் கொடி அசைத்து துவக்கியவுடன், ஆயிரக்கணக்கான மக்கள் கண்மாய்க்குள் ஒரு சேர இறங்கி மீன்களை பிடித்தனர். நன்றாக வளர்ந்த ரோகு, கட்லா, விரால், கெண்டை என பல்வேறு வகை மீன்கள் சிக்கின.