திருவாடானை: திருவாடானை அருகே சுப்பிரமணியபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. பெண்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தீபாராதனைகள், அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.