Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூதகருப்பசாமி கோயில் மீன் ... விஸ்வநாதஸ்வாமி கோவிலில் மார்ச் 18ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கற்கள் வைத்து முன்னோருக்கு வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2012
11:03

ஈரோடு: பவானி செரங்காட்டில், ஊரின் எல்லையில் கற்களை நட்டு வைத்து, அப்பகுதி மக்கள் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி வருகின்றனர். சுடுகாட்டில் வழிபாடு நடத்த இடவசதி இல்லாததால் இம்முறையை கடைபிடிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பவானி அருகே, செரங்காடு கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் இறந்தால், ஊரில் எல்லையில் உள்ள சுடுகாட்டில் புதைப்பது வழக்கம். ஆனால், இடப்பற்றாக்குறையால் புதைத்த உடலின் மீதே, மற்றவர்களின் உடலை புதைக்கும் அவலம், செரங்காட்டில் நிலவி வருகிறது.
சுடுகாட்டில் இடப்பற்றாக்குறையால், முன்னோர்களுக்கு வழிபாடு செய்வதிலும், செரங்காடு மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. சிக்கலை தீர்க்கும் விதத்தில், ஊர் எல்லையில் முன்னோர்களின் பெயர் பதித்த கல்வெட்டையும், பெரிய கற்களையும் வைத்து, செரங்காடு மக்கள் வழிபட்டு வருகின்றனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: செரங்காடு ஊர் எல்லையில் சுடுகாடு உள்ளதால், அங்கேயே இறந்தவர்களை புதைத்தும், எரித்தும் வருகிறோம். புதைக்கப்பட்ட இடத்தில் ஆண்டுதோறும் முன்னோர்களின் இறந்த தினத்திலும், அமாவாசையின் போதும், மலர்கள் வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால், செரங்காடு சுடுகாட்டில் இடப்பற்றாக்குறை நிலவுவதால், ஏற்கனவே புதைத்த உடலை எடுத்த பின், மீண்டும் அதே இடத்தில் வேறு உடல் புதைக்கப்படுகிறது. சில சமயம், ஒரு உடலின் மீதே மற்றொரு உடலையும் புதைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே, ஊரின் எல்லையில் உள்ள முச்சந்திப்பில், கற்களையேத, கல்வெட்டையோ நட்டு வைத்து, ஆண்டுதோறும் மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஒரு சிலர் தினமும் வந்து, மலர்கள் வைத்து, வழிபட்டு செல்கின்றனர், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம், : ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வெளி மாவட்டங்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் புரட்டாசி மாத மகாலய பட்ச அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாளய அமாவாசையான இன்று முன்னோரை வழிபடுவர். இது குறித்து காஞ்சிப் பெரியவர் சொல்வதைக் கேட்டால் இதன் ... மேலும்
 
temple news
உடுமலை ; மகாளய அமாவாசையை முன்னிட்டு உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில்  பிரம்மா சிவன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக பக்தர்களின் பிரார்த்தனைகளுடன், ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar