விஸ்வநாதஸ்வாமி கோவிலில் மார்ச் 18ம் தேதி மகாகும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2012 11:03
கும்பகோணம்: கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூரில் அருள்பாலித்து வரும் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாதஸ்வாமி (ருத்ரா÷க்ஷஸ்வரர்) திருக்கோவிலில் மகாகும்பாபிஷேகம் வருகிற 18ம்தேதி நடைபெற உள்ளது. இக்கோவிலில் விஸ்வநாதசுவாமிக்கு ருத்ராட்சத்தால் மட்டுமே அர்ச்சனை நடப்பது சிறப்பு. விஸ்வநாதசுவாமியை வழிபடுவதால் மறுபிறவி கிடையாது என புராணம் கூறுகிறது. இக்கோவில் பிரளய காலத்தில் கூட அழியாத அருள்நிறை தலமாகவும், தேவராஜபுரம் என போற்றி வழிபட்டதும், மகரந்த முனிவருக்கு சாபம் நீங்க பெற்ற தலம் என்ற சிறப்புடையதாகும். இக்கோவிலில் கடந்த இரு ஆண்டுக்கு முன் பொங்கல் திருநாளன்று பாம்பு வில்வஇலையால் சிவபெருமானுக்கு பூஜை செய்த தகவல் எங்கும் பரவியது. சிறப்பு வாய்ந்த இக்கோவில் பெரும் பொருட்செலவில் திருப்பணி செய்யப்பட்டு அதன் கும்பாபிஷேகம் வருகிற 18ம்தேதி ஞாயிறு காலை 10.30மணிக்கு மேல் 11.30மணிக்குள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று வாஸ்துசாந்தியும் நடைபெற உள்ளது. நாளை முதல் யாகசாலை பூஜை தொடங்கி 18ம்தேதி முடிய 6காலம் யாகசாலை பூஜை நடைபெற உள்ளது. வரும் 18ம்தேதி காலை 10.30மணிக்கு திருக்கடங்கள் புறப்பட்டு விமானங்களை சென்றடைந்து கும்பாபிஷேகமும் தொடர்ந்து மூலவர்கள் மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு காஞ்சி மடாதி பதிகள், அமைச்சர்கள், ஆன்மீக பக்தர்கள், இந்து சமய அறலைய ஆட்சித்துறை அனைத்து உயர் அதிகாரிகள் மற்றும் பலர் முன்னிலை வகிக்கின்றனர். அன்று மாலை மகாபிஷேகம், திருக்கல்யாணமகோத்சவம் நடைபெற்று பஞ்ச மூர்த்தி வீதியுலா நடைபெற உள்ளது. யாக சாலை பூஜையில் ஜபம், சதுர்வேத பாராயணம், திருமுறைப்பாராயணம், சிறப்பு நாதஸ்வர இன்னிசை கழ்ச்சிகள் நடைபெறுகிறது.