சுந்தர விநாயகர் கோவிலில் பங்குனி மாத சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2012 11:03
திருத்தணி :பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு, சுந்தர விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. திருத்தணி ம.பொ.சி. சாலையில் முருகன் கோவிலின் துணைக்கோவில் சுந்தர விநாயகர் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு அன்றும் அதிகாலை 5 மணிக்கு யாக சாலை அமைத்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு, நேற்று சுந்தர விநாயகர் கோவில் வளாகத்தில் ஒரு யாக சாலை, 18 கலசங்கள் அமைத்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நான்கு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 6 மணிக்கு, விநாயகருக்கு பால், பன்னீர் உட்பட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.