பதிவு செய்த நாள்
01
ஜூன்
2019
12:06
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திகேஸ்வர பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று காலை 9:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு, மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு மகா அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், 5:30 மணிக்கு, நந்திகேஸ்வரருக்கு 108 பால் குடம், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேக, அலங்காரம் நடந்தது.6:00 மணிக்கு பக்தர்களின் ஓம் நமச்சிவாய கோஷம் முழங்க வீரட்டானேஸ்வரர், நந்திகேஸ்வரர் பெருமானுக்கு ஒருசேர சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது.பிரதோஷ நாயகர் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களின் ஸ்ரீ ருத்ரம், திருவாசகம் முழங்க சுவாமி ஆலயம் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.