பதிவு செய்த நாள்
05
ஜூன்
2019
03:06
குன்னூர்:குன்னூர் பேரக்ஸ், சின்ன வண்டிச்சோலை பகுதியில் உள்ள புனித அந்தோணியார் குருசடி, 115வது ஆண்டு திருவிழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.கடந்த மாதம், 21ம் தேதி, புனித அந்தோணியார் குருசடியில் புனித சூசையப்பர் ஆலய உதவி பங்குத்தந்தை தலைமையில் சிறப்பு திருப்பலியுடன் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு திருப்பலிகள் நடந்தன.
தினமும் மாலை, 6:30 மணிக்கு நவநாள் நிகழ்ச்சிநடந்தது.நேற்று முன்தினம் (ஜூன்., 3ல்) திருநாள் சிறப்பு திருப்பலி பேரக்ஸ் புனித சூசையப்பர் உதவி பங்குதந்தை தலைமையில் நடந்தது.
தொடர்ந்து, அன்பின் உணவு, நவநாள், புனித சுரூபம் அலங்கார தேர் பவனி ஆகியவை நடந்தன. எம்.ஆர்.சி.,எம்.எச்., வழியாக சென்ற ஊர்வலம் குருசடியை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை குருசடி பங்கு தந்தை, உதவிப் பங்குத் தந்தையர், புனிதஅந்தோணியார் பஜனை சங்கத்தினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.