பதிவு செய்த நாள்
06
ஜூன்
2019
12:06
திருத்தணி : திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி விழாவில், அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நேற்று (ஜூன்., 5ல்) நடந்தது.
திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள, திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, கடந்த மாதம், 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், மதியம், 2:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மகாபாரத சொற்பொழிவு நடைபெறுகிறது.
மேலும், மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் அம்மன் வீதியுலாவும், இரவு, 10:00 மணிக்கு, மகாபாரத நாடகமும் நடந்து வருகிறது.இந்நிலையில்,நேற்று (ஜூன்., 5ல்), அர்ச்சுனன்
தபசு நிகழ்ச்சி நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.வரும், 9ம் தேதி காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில், தீமிதி விழாவும் நடக்கிறது.