பதிவு செய்த நாள்
07
ஜூன்
2019
12:06
வெள்ளகோவில்:வெள்ளகோவில் மாகாளியம்மன் கோவிலில் 99ம் ஆண்டு பொங்கல் பூச்சாட்டு, குண்டம் திருவிழா நடந்தது.வெள்ளகோவில் மாகாளியம்மன் கோவில் 99ம் ஆண்டு
பூச்சாட்டு குண்டம் திருவிழாவினை முன்னிட்டு நேற்று (ஜூன்., 6ல்) காலை பொங்கல் வைத்தல், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துதல், ஆகியனவும் மாலை மாவிளக்கு புறப்பாடு, தொடர்ந்து அபிஷேக ஆராதனையும் நடந்தது.நேற்று (ஜூன்., 6ல்) காலை, 6:00 மணியளவில் அக்னிச் சட்டியில் பூ வளர்த்தல், 9:00 மணிக்கு தெப்பக் குளத்திலிருந்து அக்னிச்சட்டி ஊர்வலம் புறப்படுதல், கோவில் முன்பு மாலை, 6:00 மணியளவில் பக்தர்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் பூக்குழி இறங்குதல், இரவு 9 மணியளவில் கும்பம் கங்கை புறப்படுதல் ஆகியன நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு மகா அபிஷேகம், அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழாவுடன்நிறைவடைகிறது.