Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவாலயபுரம் சங்கரநாராயணர் கோவிலில் ... திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் மகா சாந்தி யாகம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயில் நில பட்டா மாறுதல் மோசடி: பதிவுத்துறைக்கு உத்தரவு
எழுத்தின் அளவு:
மீனாட்சி அம்மன் கோயில் நில பட்டா மாறுதல் மோசடி: பதிவுத்துறைக்கு உத்தரவு

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2019
11:06

மதுரை : பட்டா மாறுதல் செய்யப்பட்ட 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் குறித்து எந்த பதிவும் செய்ய கூடாது என பதிவுத்துறை யினருக்கு கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமார் உத்தரவிட்டார்.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் மதுரையில் பல்வேறு இடங்களில் உள்ளன. இந்த இடங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் பொன்மேனி
வாழைத்தோப்பு பகுதியிலுள்ள 14 ஏக்கர் நிலத்தை யோகேஸ்வரன் என்பவர் தன் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யக்கோரி ஏற்கனவே மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு செய்தார். அம்மனு தள்ளுபடியானது. இந்நிலையில் செல்வராஜ் மேற்கு தாசில்தாராக இருந்த போது
யோகேஸ்வரன் பழைய ஆவணங்களை மறைத்து பட்டா மாறுதல் செய்ய மனு செய்தார். அதன்பேரில் அவருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இதையறிந்த கோயில் நிர்வாகம்
சார்பில் பட்டா மாறுதலை ரத்து செய்ய கோரி கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

நேற்று (ஜூன்., 7ல்) முன்னாள் மேற்கு தாசில்தார் செல்வராஜ் தற்போதைய தாசில்தார் கோபி வருவாய் ஆய்வாளர் வி.ஏ.ஒ.க்களிடம் கலெக்டர் (பொறுப்பு) விசாரணை நடத்தினார். சம்பந்தப்பட்ட நில ஆவணங்களை அவர் ஆராய்ந்தார். நிலம் குறித்து ஆர்.டி.ஓ. நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய வருவாய்த்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் இந்நிலம் குறித்து எவ்வித பதிவு பரிமாற்றமும் மேற்கொள்ளாமல் இருக்க பதிவுத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் (பொறுப்பு) உத்தரவிட்டார். விசாரணை முடிந்ததும் ஓரிரு நாட்களில் கோயில் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து கம்ப்யூட்டர் சர்வரில் ஏற்றப்படும் என வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar