பவுஞ்சூர்:செய்யூர் தாலுகா, பவுஞ்சூர் அடுத்த கருப்பூரில், கைலாயநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் (ஜூன்., 8ல்), கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக கோவிலில் உள்ள, கல்லணை விநாயகர், முத்துமாரியம்மன், சந்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள், விழாவில் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.