மானாமதுரை:மானாமதுரை-தாயமங்கலம் ரோட்டில் உள்ள சங்குவிநாயகர் கோயிலில் வைகாசி உற்ஸவ விழாவை முன்னிட்டு சங்குவிநாயகருக்கும், மற்ற பரிவார தெய்வங்களுக்கும், சர்வ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.இரவு திருவிளக்கு பூஜையும்,பூத்தட்டு ஊர்வலமும் நடந்தது. காலை வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து விநாயகருக்கும், மற்ற சாமிகளுக்கும் அபிஷேகம் செய்தனர். அன்னதானம் நடைபெற்றது. ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.