Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரமங்கலம் எம்பார் கோவில் ... காஞ்சிபுரம் ஏகாம்பரர் கோவிலில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவம்: குழப்பத்தில் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவம்: குழப்பத்தில் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
02:06

காஞ்சிபுரம்:அத்தி வரதர் வைபவத்திற்கு வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், சுவாமி தரிசன கட்டணம் குறித்த தகவல் இல்லாததால், பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை, 1ல், அத்தி வரதர் வைபவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் செய்து வருகிறது. எனினும், அத்தி வரதர் வைபவத்திற்கான அடிப்படை வசதிகள், அறநிலையத்துறை நிதியில் இருந்து செய்யப்படுகிறதா? தனியார் பங்களிப்பில் செய்யப்படுகிறதா என்பது குறித்த தகவல் இல்லை.தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கான நுழைவு கட்டணம் மற்றும் சிறப்பு கட்டணம் எவ்வளவு உள்ளிட்ட தகவல்களை, அறநிலையத் துறையோ, மாவட்ட நிர்வாகமோ, இதுவரை தெரிவிக்கவில்லை.ஆனால், அத்தி வரதரை தரிசிக்க, சிறப்பு கட்டணமாக, 500 ரூபாய் வசூல் செய்ய போவதாக, பக்தர்கள் இடையே தகவல் பரவுகிறது.இவ்வளவு பெரிய தொகை கொடுத்து, சுவாமியை தரிசனம் செய்ய முடியுமா என, எளிய குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.சம்பந்தப்பட்ட நிர்வாகம், பக்தர்களுக்கு செய்யப்பட உள்ள வசதிகள், தரிசன கட்டணம் உள்ளிட்ட தகவல்களை தெரியப்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனி செயல் அலுவலர் நியமிக்கப்படுவாரா?

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர், தியாகராஜன், கடந்தாண்டு ஜூன், 28 முதல், கூடுதலாக நிர்வகிக்கிறார். வரதர் கோவில் மட்டுமல்லாமல், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், மதுராந்தகம் ஏரிகாத்தராமர் கோவில் மற்றும் 40 சிறிய உபகோவில்களையும் கவனித்து வருகிறார்.இந்நிலையில், அத்தி வரதர் வைபவத்திற்கான அழைப்பிதழ் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து தகவல் அறிய கோவிலுக்கு சென்றால், செயல் அலுவலரை பார்க்க முடியவில்லை.அவர், கூடுதல் பொறுப்பு வகிக்கும், பிற கோவில் பணிகளுக்கு சென்றிருப்பதாக, அங்கிருப்போர் தெரிவிக்கின்றனர்.அத்தி வரதர் வைபவம் துவங்குவதற்கு மூன்று வாரங்களே உள்ள நிலையில், விழா பணிகளை துரிதப்படுத்த, வரதர் கோவிலுக்கு என, தனி செயல் அலுவலர் நியமிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar