திருப்பூர்:திருப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற விஸ்வேஸ்வரர் மற்றும் வீரராகவப் பெருமாள் கோவில்களில் உள்ள கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி நடந்தது.இதில், விஸ்வேஸ்வரர் கோவில் உண்டியலில் 7,37,922 ரூபாய்; வீரராகவப் பெருமாள் கோவிலில் 5,09,787 ரூபாயும் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இருந்தது.
மேலும் இரு கோவில் உண்டியல்களிலும் மொத்தம் 34.4 கிராம் தங்கமும், 115 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. கோவில் ஊழியர்கள், பக்தர்கள் மற்றும் சேவா சங்க மகளிர் ஈடுபட்டனர்.