பதிவு செய்த நாள்
12
ஜூன்
2019
11:06
பழநி : பழநி முருகன் கோவிலுக்கு, கோடை விடுமுறையையொட்டி திரளான பக்தர்கள் வந்ததால், 33 நாட்களில், 2.84 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளது.கோடை விடுமுறையால், மே மாதம், திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலுக்கு, ஏராளமான சுற்றுலாப் பயணியர் மற்றும் பக்தர்கள் வந்தனர். இதனால் நிரம்பிய உண்டியல்கள், 33 நாட்களுக்கு பின், நேற்று முன்தினம் திறந்து, எண்ணப்பட்டன.
முதல் நாள், 1.69 கோடி ரூபாய் ரொக்கம்; 832 கிராம் தங்கம்; 14,690 கிராம் வெள்ளி கிடைத்தன. தொடர்ந்து, நேற்று, இரண்டாம் நாள் எண்ணிக்கையில், 1.15 கோடி ரூபாய் ரொக்கம்; 285 கிராம் தங்கம்; 2,470 கிராம் வெள்ளி கிடைத்தன.இரு நாட்களிலும், 617, வெளிநாட்டு கரன்சிகள்- கிடைத்துள்ளன. அதன் மதிப்பு, கணக்கிடப்பட்டு வருகிறது.