ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே விபீஷணருக்கு ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா ஜூன் 10ல் துவங்கியது. 2ம் நாள் விழாவான நேற்று கோயிலில் இருந்து தங்க கேடயத்தில் ஸ்ரீ ராமர் சீதை லெட்சுமணர்அனுமானுடன் புறப்பாடாகினர்.பின் தனுஷ்கோடி அருகே கோதண்டராமர்கோயிலில் ஸ்ரீராமர்எழுந்தருளியதும் கோயில் குருக்கள் ராமாயணவரலாறு வாசித்தார்.சிறைபிடித்த சீதையை திருப்பி அனுப்புங்கள்என விபீஷணர் தனதுஅண்ணன் ராவணனிடம்கூறியதும் ராவணன் மறுத்து விபீஷணரை அவமானப்படுத்தினார்.
உடனே விபீஷணர் அரசவையில் இருந்து வெளியேறி தனுஷ்கோடிவந்தார்.இலங்கை மன்னராக விபீஷணரை அறிவித்து அவருக்கு ராமர் பட்டாபிஷேகம் சூட்டினார் என தெரிவித்தார்.இதனை நினைவு கூறும் விதமாக நேற்று தனுஷ்கோடியில் விபீஷணருக்கு ஸ்ரீராமர் சார்பில் கோயில் குருக்கள் பட்டாபிஷேகம் நடத்தினார். பின் ஸ்ரீ ராமர் விபீஷணருக்கு மகா தீபாராதனை நடந்தது.இதில் கோயில் இணை ஆணையர் கல்யாணி உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் கண்காணிப்பாளர் கக்காரின் பஷே்கார்கள்கமலநாதன் கலைசெல்வம் கண்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.