பண்ருட்டி:திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில், பஞ்சமூர்த்தி கள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த 6ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 13ம் தேதி வரை தினசரி காலை,மாலை உற்சவர் பஞ்சமூர்த்தி சுவாமிகள் உள்புறப்பாடு நடக்கிறது.நேற்று முன்தினம் 5ம் நாள் உற்சவத்தில் காலை 6 மணிக்கு கோ- பூஜை, 7:30 மணிக்கு வெள்ளிப்படி சட்டத்தில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் உள்புறப்பாடு நடந்தது. இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் உற்சவர்வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி வீதியுலா நடந்தது.நேற்று (11ம் தேதி) காலை வெள்ளிப்படி சட்டத்திலும், இரவு யானை வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று (12ம் தேதி) இரவு கைலாச வாகனத்திலும், 13ம் தேதி குதிரை வாகனத்திலும் சுவாமி, அம்பாள் புறப்பாடுநடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக திருத்தேர் உற்சவம் வரும் 14ம் தேதி காலை 7:30 மணிக்கு நடக்கிறது.