பதிவு செய்த நாள்
12
ஜூன்
2019
02:06
குளித்தலை: வலையப்பட்டி மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பால் குட ஊர்வலம் நடந்தது. குளித்தலை அருகே, வலையப்பட்டி மாரியம்மன்,
காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று (ஜூன்., 11ல்) காலை, கிராம பொது மக்கள் குளித்தலை கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் தீர்த்தம், பால்குடம் எடுத்துக் கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். மதியம், கிடா வெட்டு, மாலை அக்னிச் சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல் போன்ற நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு கரகம்பாலித்து, முக்கிய வீதிகள் வழியாக சுவாமி திருவீதி உலா நடந்தது. நாளை (ஜூன்., 13ல்)மாலை மாவிளக்கு ஊர்வலம், வாணவேடிக்கை தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. பின் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.