பதிவு செய்த நாள்
12
ஜூன்
2019
02:06
உடுமலை:சோமவாரப்பட்டி மகுடீஸ்வரி அம்மன் கும்பாபிஷேக விழா வரும் 14 ம் தேதி நடக்கிறது.குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டியில், மகுடீஸ்வரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில், புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா, கடந்த 3ம் தேதி யாகசாலை சுபமுகூர்த்த கால் போட்டு, முளைப்பாலிகை போடுதலுடன் துவங்கியது.நாளை, (13ம்
தேதி) காலை, 9:00 மணிக்கு, மகாகணபதி ஹோமம், மண்டப புண்ணிய அர்ச்சனை அனுமதி பெறுதல், நவநாயகர் சாந்தி லட்சுமி பூஜை நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு, ஊர் விநாயகர்
கோவில் முன் சக்தி அழைத்தல், முளைப்பாலிகை, தீர்த்த காவடிகள் புறப்பாடு, துவார பூஜை, பூர்ணாகுதி உட்பட சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. வரும் 14ம் தேதி காலை, 5:00 மணிக்கு, சந்தி பூஜை, புண்யவாசனம், துவார பூஜை, இரண்டாம் கால மகாயாகம் உட்பட பூஜைகளுக்கு பிறகு, மகா அபிஷேகம், மகாதீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.