பதிவு செய்த நாள்
13
ஜூன்
2019
11:06
போத்தனுார்: சுந்தராபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று சக்தி கரக ஊர்வலம், மாவிளக்கு வழிபாடுகள் நடந்தன. சுந்தராபுரத்திலுள்ள மாரியம்மன் கோவில், 37ம் ஆண்டு திருவிழா கடந்த, 28ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து வந்த நாட்களில், மகா ஆராதனைதிருவிளக்கு பூஜை, உள்ளிட்டவை நடந்தன. நேற்று காலை குறிச்சி, பொங்காளியம்மன் கோவிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் அம்மன் வீற்றிருக்க, சக்தி கரக ஊர்வலம் புறப்பட்டு, மதியம் கோவிலை வந்தடைந்தது. மதியம் அம்மனுக்கு அக்னி அபிஷேகம், மாலையில் பொங்கல், மாவிளக்கு வழிபாடுகள் நடந்தன. திரளானோர் அம்மனை வழிபட்டுச் சென்றனர். இன்று மாலை மஞ்சள் நீராட்டுடன், அம்மன் திருவீதி உலா நடக்கிறது. நாளை மதியம், மகா அபிஷேக ஆராதனை மற்றும் அன்னதானத்துடன் விழா நிறைவடைகிறது.