புதுச்சேரி:அண்ணா நகர் சர்வசித்தி வலம்புரி விநாயகர் கோவிலில் 8 ம் ஆண்டு சம்வத்ஸராபிஷேக விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி, அண்ணா நகர், 8 வது குறுக்குத் தெருவில் உள்ள சர்வ சித்தி வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 8ம் ஆண்டு சம்வத்ஸராபிஷேக விழா நேற்று நடந்தது.இதையொட்டி, மாலை 6:00 மணிக்கு சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, 6:30 மணிக்கு கலச ஸ்தாபனம், 6:45 விசஷே மூலமந்திர மகாமந்திர ஹோமம், இரவு 7:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 7.15 மணிக்கு மகா அபிஷேகம், 7.30 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.இரவு 7:45 மணிக்கு அருணாகிரிநாதர் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.