பேரையூர்: பேரையூர் அருகே பாப்பையாபுரத்தில் காளியம்மன் கோயில் பொங்கல் விழா ஜூன் 4 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும், அக்னிசட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாறு வேடப்போட்டிகள், முளைப்பாரி ஊர்வலம் நடந்தன.