பதிவு செய்த நாள்
17
ஜூன்
2019
11:06
பழநி : உலகநலன் வேண்டி, பழநி முருகன் கோயிலில் 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி, அபிஷேகம், யாகபூஜை மற்றும் அன்னாபிஷேகம் நடந்தது.
பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் 108 சங்குகளில் நிரப்பப்பட்டு, தங்கச்சப்பரத்தில் கும்ப கலசங்கள் வைத்து யாக பூஜை நடந்தது. உச்சிக் காலத்தில் மூலவருக்கு 108 சங்கு புனிதநீர் அபிஷேகம் செய்து, வில்வம் கலந்த சுத்த அன்னம் மூலவர் சிரசில் கிரீடமாக சூட்டியும், பாதங்களில் படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. துணை ஆணையர்(பொ) செந்தில்குமார், சித்தநாதன் அன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேல், செந்தில்குமார், கார்த்திகேயன் மற்றும் பலர் பங்கேற்றனர். இன்று ( ஜூன் 17ல்) திருஆவினன்குடி கோயிலில் சாயரட்சை பூஜையில் அன்னாபிஷேகம் நடக்கிறது. ஜூன் 18ல் பெரியநாயகியம்மன் கோயிலும், ஜூன் 19ல் கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேக விழா நடக்கிறது.