திட்டக்குடி: தொழுதூர் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.திட்டக்குடி அடுத்த தொழுதூரில் உள்ள மகாமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 6ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, வீதியுலா நடந்தது.
ஒன்பதாம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் (ஜூன்., 15ல்) தேர் திருவிழாவை யொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் மகாமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.தொழுதூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.