கரூர்: கரூர் படிக்கட்டு துறை ஒத்தை வேஷ்டி சுவாமிகள் ஜீவ சமாதியில், 64ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று (ஜூன்., 16ல்) நடந்தது. ஜீவ சமாதியில் உள்ள காசி விஸ்வநாதர் சுவாமிக்கு, காலை மஹா அபிஷேகம், அதை தொடர்ந்து, சங்காபிஷேக விழா நடந்தது. மதியம், மஹா தீபாராதனை நடந்தது. பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆலய நிர்வாகிகள் மாணிக்கம், சாய் உமாபதி உள்பட பலர் பங்கேற்றனர்.