பதிவு செய்த நாள்
17
ஜூன்
2019
03:06
காஞ்சிபுரம் : காஞ்சி அத்தி வரதர் வைபவத்திற்காக, தற்காலிக பஸ் நிலையத்தில், எந்தெந்த பஸ்கள் எங்கு நிறுத்தப்படுகிறது என, போக்குவரத்து கழகம்அறிவித்துள்ளது.காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவத்திற்காக, நகர் பகுதியில் நெரிசலை தவிர்க்கும் வகையில், நகருக்கு வெளியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க முடிவுசெய்யப்பட்டது.அதன்படி, ஒலிமுகமது பேட்டை, ஓரிக்கை, பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானம் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
ஒலிமுகமது பேட்டை லாலா தோட்டம்: சென்னை, திருவள்ளூர், பூந்தமல்லி, திருத்தணி, திருப்பதி, வேலூர், ஓசூர், பெங்களூரூ ஆகிய ஊர்களுக்கு செல்லும், வரும் பஸ்கள், லாலா தோட்டம் பகுதியில் நிறுத்தப்படும்ஓரிக்கை தற்காலிக பஸ் நிலையம்: காஞ்சிபுரத்தில்
இருந்து, மாகரல் வழியாக, உத்திரமேரூர் செல்லும் பஸ்கள், வந்தவாசி, திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி, திருச்சி, புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு புறப்படும், வந்தடையும் பஸ்கள், ஓரிக்கை பணிமனை எதிரில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில்நிறுத்தப்படும்.காஞ்சிபுரம்
பஸ்நிலையம்: காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத் வழியாக, தாம்பரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், மாமல்லபுரம், ஆகிய ஊர்களுக்கு செல்லும், வந்தடையும் பஸ்கள் அனைத்தும், நகர் மத்தியபஸ் நிலையத்தில் இருந்து, பழைய ரயில் நிலையம் வழியாக வையாவூர்,
நத்தப்பேட்டை வழியாக செல்லும்.
காஞ்சிபுரத்தில் இருந்து, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், சென்னை - செய்யாறு, திருவண்ணாமலை, போளூர், ஆகிய பஸ்கள், ஒலிமுகமதுபேட்டை, கீழம்பி, கீழ்கதிர்பூர் புறவழிச்சாலையாக சென்று, திண்டிவனம் சாலையில் இணைந்து வழக்கம் போல் இயக்கப்படும்.
தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து, காஞ்சிபுரம் வழியாக வேலூர், பெங்களூரூ, திருப்பதி, திருத்தணி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், பெரியார் நகர் வழியாக, மிலிட்டரி சாலை, ஓரிக்கை, செவிலிமேடு, கீழ்கதிர்பூர் புறவழிச்சாலை வழியாக செல்லும்.
ஓரிக்கை, ஒலிமுகமதுபேட்டை ஆகிய தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து, வரதராஜப் பெருமாள் கோவில் வழியாக பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில்,தனியார் பஸ்கள், டூரிஸ்ட் வேன்கள் நிறுத்தும் இடம் வரை இணைப்பு பஸ்கள் இயக்கப்படும்.