பதிவு செய்த நாள்
17
ஜூன்
2019
03:06
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம், திருமலை சொக்கம்மன் கோவிலில், ஆனி பவுர்ணமி விழா, நேற்று (ஜூன்., 16ல்), கோலாகலமாக நடந்தது.
ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவி லின் துணைக் கோவில்களில் ஒன்றாக திருமலை சொக்கம்மன் கோவில் விளங்குகிறது.மாத பிறப்பு, பவுர்ணமி, விசாகம், சஷ்டி மற்றும் பிரதோஷ நாட்களில், கிரிவலம் வருவோர் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
இக்கோவிலில், நேற்று (ஜூன்.,16ல்), ஆனி மாத பவுர்ணமியையொட்டி, மூலவர் சொக்கம் மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீரால் மஹா அபிஷேகம், தீப தூப ஆராதனை நடந்தது. அதன் பின், சிறப்பு முத்தங்கி சேவை அலங்காரத்தில் சொக்கம்மன் பக்தர்களுக்கு
அருள்பாலித்தார். தொடர்ந்து, அம்மன் சிறப்புகளை போற்றி அர்ச்சனை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர், ராஜேந்திரன் செய்திருத்தார்.