நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு அன்று மாலை 3:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி, தண்டாயுதபாணி, நால்வர், சித்தர் ஜீவசமாதிகள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் கோவில் மலை அடிவாரத்தை 16 முறை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு 9:00 மணிக்கு ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உலா வந்து ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9:10 மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.