கோவை:உலக நன்மை வேண்டி, வெள்ளலுாரில் நடந்த, தொடர் நாம பஜனை நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வெள்ளலுார் சுவாமி விவேகானந்தர் பேரவை கீதா பஜன் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் 16ம் ஆண்டு விழா, வெள்ளலுாரில் உள்ள அரசண்ணன் கோவில் வழிபாட்டு மண்டபம் மற்றும் பெரிய விநாயகர் கோவிலில் நடந்தது.நேற்று முன் தினம் காலை முதல் இரவு, வரை, தொடர் நாம பஜனை நிகழ்ச்சி மற்றும் ஆரோக்கிய ஐஸ்வர்ய ேஹாமம் நடந்தன.ேஹாமத்தில், ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாக அமர வைத்து பூஜைகள் நடந்தன. தொடர் நாம பஜனையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள, பஜனை கோஷ்டியினர் பஜனை பாடல்கள் பாடினர்.சுவாமி விவேகானந்தர் பேரவை கீதா பஜன் ஒருங்கிணைப்பாளர் சிவாஜி, பள்ளபாளையம் ராமகிருஷ்ணா ஆசிரமத்தின் கேசவானந்த சுவாமிகள், பிருந்தாவன் பப்ளிக் பள்ளி தாளாளர் வனிதா, சக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் சிவசண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.