காஞ்சிபுரம் சித்தி விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2019 02:06
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பாவாபேட்டை தெரு, சித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது.இக்கோவிலில், ஏப்., 26ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடந்து வந்தது.நிறைவு நாளன்று, காலை, 7:00 மணிக்கு, 108 சங்காபிஷேகமும், சித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரிஅம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,மஹா தீபாராதனையும் நடந்தது.